Wednesday, November 30, 2011

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

imagesCAH12VU1
பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்

imagesCA4CEZGF

டெஹ்ரான்:ஈரான் தலைநகரான டெஹ்ரானில் பிரிட்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்நாட்டின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் அங்கு நாட்டப்பட்டிருந்த பிரிட்டன் கொடியை எரித்துவிட்டு ஈரான் கொடியை ஏற்றினார்.

தூதரகத்தின் மீது மக்கள் கற்கள் வீசுவது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த காட்சி ஆகியவற்றை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

நார்வே:77 பேரை படுகொலை செய்த ப்ரெவிக்கிற்கு பைத்தியமாம் – அறிக்கை கூறுகிறது

brevik
ஓஸ்லோ:நார்வே கொலையாளி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் சித்த பிரமை பிடித்துள்ளது என மனோதத்துவ அறிக்கை கூறுகிறது.

ப்ரெவிக்கை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர்கள்தாம் இதனை தெரிவித்துள்ளனர். கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் கற்பனையான எண்ணங்களை கொண்ட ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் ப்ரெவிக் இருந்ததாக இரண்டு மனோதத்துவ நிபுணர்கள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நலப்பணியாளர்கள்: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? – உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி

dsc
டெல்லி:தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.

முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை எல்லாம் தற்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு முடக்கி வருகிறது.சட்டப்பேரவை கட்டிடம், சமச்சீர் கல்வி, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் ஜெ.அரசின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் ஏற்றுவோம் என மிரட்டல் – சிகிட்சையை நிராகரித்தார் ஹஸன் அலி

hasan-ali-1_230_032411094006
புதுடெல்லி:கறுப்பு பண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஹஸன் அலி கான் மருத்துவமனையில் சிகிட்சையை நிராகரித்துவிட்டார். அரசுக்கு சொந்தமான ஜே.ஜே மருத்துவமனையில் ஹஸன் அலி சிகிட்சை பெற்று வருகிறார்.

ஒரு கோடி ரூபாய் அளிக்காவிட்டால் உடலில் எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் ஏற்றிவிடுவேன் என டாக்டர்களில் ஒருவர் மிரட்டியதாக ஹஸன் அலி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் அமைந்துள்ள சிறை வார்டில் இவர் சிகிட்சை பெற்று வருகிறார். ஹஸன் அலி கான் எந்த டாக்டரையும் தன்னை சிகிட்சை செய்ய அனுமதிக்க மறுப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால்:மீண்டும் உண்ணாவிரதம் – ஹஸாரே மிரட்டல்

imagesCAOSOEL9
புதுடெல்லி:லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்ற குழு தயார் செய்த வரைவு அறிக்கை நாட்டு மக்களை ஏமாற்றுவதாகும் எனக் கூறியுள்ள அன்னா ஹஸாரே அடுத்த மாதம் 27-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக அடுத்த மாதம் 11-ஆம் தேதி ஜந்தர்மந்தரில் தர்ணா நடத்தப்போவதாகவும் ஹஸாரே அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tuesday, November 29, 2011

ஈராக்:சிறைக்கு வெளியே குண்டுவெடிப்பு-19 பேர் மரணம்

A man who was wounded in a bomb attack is treated at a hospital in Baghdad.
பாக்தாத்:வடக்கு பாக்தாதில் சிறைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாக்தாதிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தாஜியில் ஹூத் சிறைக்கு அருகே வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில தினங்களிடையே ஈராக்கில் நடக்கும் 3-வது குண்டுவெடிப்பாகும்.

சனிக்கிழமை அபூகரீப் மாகாணத்தில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலில் 10 பேரும், அதற்கு முந்தைய தினம் துறைமுக நகரமான பஸ்ராவில் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் 19 பேரும் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தை கைவிடும் தாலிபானுக்கு மாதம் 150$ நிதியுதவி: நேட்டோ அறிவிப்பு

untitled

வாஷிங்டன்:தாலிபான்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டால் மாதம் 150 அமெரிக்க டாலர் நிதியுதவி மற்றும் கொலை குற்றச்சாட்டுகளிலிருந்து பொது மன்னிப்பு வழங்கபடுமென நேட்டோ அறிவித்துள்ளதாக செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அமெரிக்க, இங்கிலாந்து வீரர்களை குறிவைத்து தாலிபான்கள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தடுப்பதற்கு அமெரிக்க தலைமையிலான நேட்டோ இதனை அறிவித்துள்ளது எனத் தெரிகிறது.

குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்

asimanand
டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்;’என்னை மிரட்டி வாங்கிய வாக்குமூலம் அதை, நான் பின்வாங்கிய பின்னும், எந்த நீதிமன்றமும் குறிப்பிடாதபோது எவ்வாறு அதை எடுத்துக்கொள்ளலாம்?, எப்படி தேசிய புலனாய்வு அமைப்பு மாலேகான் வழக்கில் முஸ்லிம் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொள்ளலாம், இந்த விவகாரங்களை எப்படி மத்திய அரசு அமெரிக்காவுடனும் ஐநாவுடனும் பகிர்ந்து கொள்ளலாம்?’ என கேட்டு எழுதியுள்ளார்.

Monday, November 28, 2011

முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்

வாஷிங்டன்:ஜான் பெநிதெஸ், மிச்சிகன் மகாணத்தில  சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவின் அதிக முஸ்லிம்களை கொண்ட மகாணத்தில் இதுவும் ஒன்று. அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் போதிலும், இங்கு செவிலியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.

உதவிக்காக வரும் முஸ்லிம் நோயாளிகளிக்கு எதிராக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இருப்பினும் ஒரு முஸ்லிம் மேலதிகாரி, ஹிஜாபுடன் வரும் முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்கள் தொடுவதை விரும்பமாட்டார்கள் எனவே என்னிடம் அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

Dua For Gaza