Monday, November 28, 2011

தெருக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு போலீசாரை கண்டு பயம்: ஸய்யித் ஷஹாபுத்தீன்

vlcsnap-2011-11-28-08h54m09s247

புதுடெல்லி:இந்தியா முழுவதும் உள்ள தெருக்களில் முஸ்லிம்கள் போலீசாரை பயந்து வாழும் சூழல் நிலவுவதாக ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராவின் தலைவர் ஸய்யித் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூகநீதி மாநாட்டில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர். முஸ்லிம்கள் போலீசாருக்கு பயந்து வாழும் சூழலை முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் அதனை நிறைவேற்றாமலும் இருந்து வருகின்றனர். ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. முஸ்லிம்கள் மீது தீவிரமாக பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம் நிறைவேறும் – மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்

Mahant Acharya Ayodya
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது: ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே போல நடத்தப்படவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு

Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.

ஹிந்துத்துவா மிரட்டல்:ஹுஸைன் டாக்குமெண்டரி வெளியிடுவது ஒத்திவைப்பு

'Through The Eyes Of A Painter'1967

பனாஜி:பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் தயாரித்த ஆவணப்படத்தை ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்கள் வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாவின் நினைவு அஞ்சலி பிரிவில் இன்று வெளியிடப்படவிருந்த ஹுஸைன் கதை எழுதி இயக்கி தயாரித்த  ‘த்ரூ த அய்ஸ் ஆஃப் த பெயிண்டர்’  என்ற ஆவணப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sunday, November 27, 2011

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

shahi-imam
புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி

morocco
ரபாத்:அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.

முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார். இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

ImranKhan

பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் வளர்ச்சிக்கு தடைபோட முடியாது. இது இந்நாட்டில் உள்ள அனைவரது கட்சியாகும் என இம்ரான் கான் தெரிவித்தார். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் பின்னால் தேசவிரோத சக்திகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார் அவர். வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்தால் முன்னரே தேர்தல் நடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என அவர் கூறினார்.

Saturday, November 26, 2011

ராம்லீலா மைதானம் தயார்: சமூக நீதி மாநாட்டிற்கு இன்று துவக்கம்

pfi sjc
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய சமூக நீதி மாநாட்டிற்காக டெல்லி ராம்லீலா மைதானம் தயாராகி உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடி ஏற்றி மாநாட்டை துவக்கி வைப்பார்.

சுதந்திரத்திற்கு பிறகு ஏராளமான அரசிய, சமூக மாநாடுகளுக்கு சாட்சியம் வகித்துள்ள ராம்லீலாவில் கேராளவிலிருந்து துவங்கி தமிழகம், கர்நாடகா என தென்மாநிலங்களில் ஆழமாக கால் பதித்து வட இந்தியாவை நோக்கி காலடி தடங்களை எடுத்துவைத்துள்ள பாப்புலர் ஃப்ர்ண்ட் என்ற நவீன சமூக இயக்கம் சமூக நீதிக்காக நடத்தும் இம்மாநாடு ஏராளமான எதிர்பார்ப்புகளை அளிப்பதாக அவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

kuwait opposition

குவைத்:பாராளுமன்றத்தில் போலீசாருடன் நடந்த மோதலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 20 குவைத் எதிகட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத காவல் மற்றும் போலீசாரின் கொடூரமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சி ஆதரவாளர்கள் சோசியல் இணையதளமான ட்விட்டரில் கூறியுள்ளனர்.

குற்றவாளிகளை அடைத்துவைக்கும் சிறையில் எதிர்கட்சி தொண்டர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், உறவினர்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இம்மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 பேரின் காவலை நீட்டியதை தொடர்ந்து இவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான எதிர்கட்சி தொண்டர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலகத்திற்கு முன்பு திரண்டிருந்தனர்.

ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது

imagesCAZ286ZI

டெஹ்ரான்:ஈரானின் ராணுவத்தைக குறித்தும், அணுசக்தி திட்டத்தை குறித்தும் உளவறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏவின் 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானின் தேசிய-பாதுகாப்பு வெளியுறவு விவகார பாராளுமன்ற குழு உறுப்பினர் பர்வேஸ் ஸுரூரியை மேற்கோள்காட்டி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Dua For Gaza