ஜெய்ப்பூர்:ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. ஜிஸ்தியின் மனைவியும், பிள்ளைகளும் அஜ்மீருக்கு வருகை தந்துள்ளதை அடுத்து அவரது விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஜிஸ்தியின் விடுதலை தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள கருணை மனு ராஜஸ்தான் செயல் ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீல் பரிசீலனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கு விசாரணை 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது குறித்தும், வழக்கில் ஜிஸ்தியின் பங்கினைக் குறித்தும் கூடுதல் விபரங்களை அளிக்க கோரி ஆளுநர் கருணை மனுவை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வருடம் ஜனவரி மாதம் ஜிஸ்திக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
