Sunday, November 10, 2013

ஐ.நா அமைப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் தகுதியிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன.
பலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பில் உறுப்பினராக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பலஸ்தீனத்தை உறுப்பினராக இணைத்துக் கொண்டதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்தன.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகின்ற 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. சொந்த நாட்டு மக்களையே அழித்தொழித்து, சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே அரசை உலக நாடுகள் கண்டித்துக்கொண்டிருக்கும் வேளையில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அது உலக நாடுகளுக்கு மத்தியில் ராஜபக்சே அரசுக்கு மதிப்பைக் கூட்டும் விதமாகவும், ராஜபக்சே அரசு முன்னின்று மேற்கொண்ட இனப்படுகொலைகளை மறக்கடிக்கும் விதமாகவும் அமைந்து விடும்.

Saturday, November 9, 2013

நிரபராதிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு: மனித உரிமை கமிஷன் கர்நாடகா போலீஸ் மீது வழக்கு!


shrc

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 3 முஸ்லிம்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்த சம்பவத்தில் கர்நாடகா போலீஸ் மீது அம்மாநில மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நீதிமன்றம் அல் அக்ஸா இமாம் மீது குற்றச்சாட்டு!


''KUDUS'TEKI OSMANLI MIRASIMIZ TEHLIKEDE'' PROGRAMI

ஜெருசலேம்: முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைதுல் முகத்தஸ் என்றழைக்கப்படும் அல் அக்ஸா மஸ்ஜிதின் இமாம் ஷேக் ராஇத் ஸலாஹி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று இஸ்ரேல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டு அவர் நிகழ்த்திய ஓர் உரையில், “அல் அக்ஸாவைக் காப்பதற்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று அவர் பேசியது வன்முறையையும், இனவாதத்தையும் தூண்டியதாம்.

முஸஃபர் நகர் கலவரம்: 254 வழக்குகளில் விசாரணை நிறைவுற்றது!


Muzaffarnagar_Oct31360

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான 254 வழக்குகளில் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) முகுல் கோயல் கூறியதாவது:

Thursday, November 7, 2013

சவூதியில் இந்தியர்கள் துன்புறுத்தப்படவில்லை! – மத்திய அமைச்சர் வயலார் ரவி!

சவுதி அரேபிய அரசு, சட்டவிரோதமாக நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி ஆவணங்களை சட்ட ரீதியாகத் திருத்திக்கொள்ள அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டதாக எந்த ஒரு புகாரும் இல்லை என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியிருக்கிறார்.

யாசர் அராஃபத் படுகொலை - திடுக்கிடும் தகவல் அம்பலம்!

பாரிஸ்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்காக தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு அஹிம்சை வழியில் பயணித்த யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டாலும் அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

Tuesday, November 5, 2013

புதுவலசையில் மழை!

புதுவலசையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக  ஜாமிஆ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த மரம் ஒடிந்து கீழே விழுந்தது. மேலும் நமதூர் பள்ளிக்கூடத்தின் மைதானத்திலும், தெருவிலுள்ள  சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.   

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் கொடூரங்களுக்கு துணை போன மருத்துவர்கள்: புதிய அறிக்கை!



அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், தீவிரவாதம் என்ற பெயரால் சந்தேகிக்கப்படும் நபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Dua For Gaza