புதுடெல்லி : ஆந்திரமாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மற்றும் இஃப்லு பல்கலைக் கழக வளாகங்களில் சிறுபான்மை, தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் போலீஸுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இமாமுல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏ.பி.வி.பி) தாக்குதலுக்கு இரையாகும் தலித் மாணவர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டுள்ளது. இஃப்லு பல்கலைக் கழகத்தில் கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் முதஸ்ஸிர் கம்ரானின் தற்கொலைக்கு காரணம் பல்கலைக் கழக நிர்வாகிகள், பாசிச மாணவர் அமைப்புகள், போலீஸ் ஆகியோரின் சதித்திட்டமாகும்.



