காந்திநகர்:பிரதமர் கனவில் மூழ்கியுள்ள குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை நியமிக்க மறுத்து வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமித்தால் வளர்ச்சி நாயகன் வேடம் போடு தனது உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்றுஅஞ்சியே லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை மோடி புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாநில ஆளுநர் கமலா பெனிவால் கமலா பெனிவால் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நீதிபதி ஆர்.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக நியமித்தார். இதற்கு எதிராக மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.




