வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரில் 22 பேர் சராசரியாக தினமும் தற்கொலைச் செய்துகொள்வதாக அமெரிக்க அரசு நடத்திய முக்கிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும். சுமார் 60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலான ஆய்வுகளின்படி, இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 50 வயதுக்குமேற்பட்டவர்களாவர்.




