ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தத்தெடுக்கப்பட்ட வாலிநோக்கம் கிராமத்தில் டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 01.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீனவர் காலணியில் உள்ள ரிஹாப் சமுதாயக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் டெங்கு விழிப்புணர்வு , இரத்தப் பிரிவு கண்டறிதல் , நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் தலைமை தாங்கினார் .



