லக்னோ:இந்தியாவில் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவுற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உ.பியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரியவந்துள்ளது.
முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி பார்ட்டி(எஸ்.பி) தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
