Saturday, January 14, 2012

கோத்ரா:இறந்த உடல்களை கொண்டுவர தீர்மானித்தது மோடியாக இருக்கலாம் – ஸதாஃபியா வாக்குமூலம்

zadafia
அஹ்மதாபாத்:கோத்ரா ரெயில் தீவைப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவர முதல்வர் மோடி தீர்மானித்திருக்கலாம் என குஜராத் முன்னாள் அமைச்சர் கோர்டன் ஸதாஃபியா நானாவதி கமிஷன் முன்னால் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி டி.ஜி.பி அலுவலகத்திற்கு செல்ல முன்னாள் அமைச்சர் ஐ.கே.ஜடேஜாவுக்கு நான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என ஸதாஃபியா கூறினார். நகரத்தில் கலவர சூழல் ஏற்பட்டது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என ஸதாஃபியா கூறுவது பொய் என மோடியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிசஞ்சீவ் பட் கூறியிருந்தார்.

அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு

Mostafa Ahmadi Roshan, who Iran say was killed in a bomb blast in Tehran
டெஹ்ரான்:ஈரானின் இளம் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரூஷனின் கொலைக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பங்கினைக் குறித்த கடுமையான குற்றச்சாட்டை ஈரான் எழுப்பியுள்ளது.

ஈரான் மீது புலனாய்வு உளவு வேலைகளை துவங்க பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ-6-ன் தலைவர் ஜான் ஸாவெர் உத்தரவிட்ட பின் ரூஷன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என பிரிட்டீஷ் வெளியுறவு அமைச்சகத்திற்கு அளித்த தூதரக கடிதத்தில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணு சக்தி ஒப்பந்தத்தைமுழுமையாக அமுல்படுத்த வேண்டும் – இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு

U.S.–India Civil Nuclear Agreement
வாஷிங்டன்:இந்தியா-அமெரிக்க சிவிலியன் அணு ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதிச்செய்யுமாறு அமெரிக்காவின் ஒபாமா அரசு இந்தியாவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆயுத கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை அண்டர் செக்கரட்டரி எலன் ட்ரோஷர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக செய்தியாளர்களிடையே நடந்த சந்திப்பில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது: ‘அணு சக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் விஷயத்தில் அமெரிக்க அரசுக்கு எவ்வளவு தூரம் நிர்பந்தம்ஏற்பட்டுள்ளது என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும். இதனைக் குறித்து இந்திய அரசு எங்களிடம் உறுதி அளித்துள்ளது. ஆனால், காரியங்களை பூர்த்திச்செய்ய இந்தியா இதுவரை தயாராகவில்லை. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான சட்டம் உருவாக்கம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்தியா பூர்த்திச் செய்துள்ளது. இவ்வாறு ட்ரோஷர் கூறினார்.

மத்தியபிரதேசம் மசூதி விழாவில் கூட்ட நெரிசல்- 4 பெண்கள் உள்பட 12 பேர் பலி

30764266-2172144
ரத்லாம்:மத்திய பிரதேச மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் மசூதி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவடத்தில் உள்ளது ஹுசைன் தெக்ரி என்னும் மசூதி. அங்குள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முஹர்ரம் மாதம் பிறந்து 40 நாட்கள் கழித்து செஹல்லம் என்னும் பிரார்த்தனை செய்வார்கள். அந்த பிரார்த்தனை இன்று காலை துவங்கியது.

தாலிபான் போராளிகள் உடல்கள்மீது சிறுநீர்கழித்த ராணுவ வீரர்களின் அடையாளம் தெரிந்தது

தாலிபான் போராளிகள் உடல்கள்மீது சிறுநீர்கழித்த ராணுவ வீரர்கள
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த இரண்டு அமெரிக்க ராணுவத்தினரை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் கேவலமான செயலின் வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.

தாலிபானின் செல்வாக்கு மிகுந்த தெற்கு ஆப்கானில் உள்ள ஹெல்மந்த் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான ஏழுமாத பணி வேளையில் இந்த கேவலமான செயலை அமெரிக்க ராணுவ வீரர்கள் புரிந்துள்ளனர்.

உள்நாட்டுப் போரை நோக்கி சிரியா -அரபு லீக்

Mideast Syria
பெய்ரூத்:மக்கள் எழுச்சிப் போராட்டமும், சிவிலியன் மரணங்களும் தீவிரமடைந்துள்ள சிரியா, உள்நாட்டுப் போரை அண்மிப்பதாக அரபுலீக்கின் தலைவர் நபீல் அல் அரபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, அரபு லீக்கின் கண்காணிப்புக் குழுவை சார்ந்த அல்ஜீரியா, சூடான் பிரதிநிதிகளை திருப்பி அனுப்பியதாக கெய்ரோ தலைவர் அத்னான் அல் குதைர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களை காட்டி இருவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

இ.எம்.அப்துற்றஹ்மான்
புதுடெல்லி:தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

nmodi

அஹமதாபாத் 2002 குஜராத் இனக்கலவர வழக்குகளில், நரேந்திர மோடிக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னால் கூடுதல் போலீஸ் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீகுமார், தற்போது மேலும் ஒரு மனுவை நானாவதி கமிஷன் முன் சமர்பித்துள்ளார்.

முஸ்லீம்களுக்கு எதிரான கட்டுரை: சுப்பிரமணியம் சுவாமிக்கு முன் ஜாமீன்

ssamy
டெல்லி:முஸ்லீம்களுக்கெதிரான கட்டுரை விவகாரத்தில் ஜனவரி 30ம் தேதி வரை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

சுப்பிரமணியம் சுவாமிக்கெதிராக டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ததையடுத்து, முன் ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எல்.மெஹ்தா, வரும் ஜனவரி 30ம் தேதிவரை சுவாமியை கைது செய்யக்கூடாது என உத்தவிட்டார்.

Thursday, January 12, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை! SDPI கடும் கண்டனம்!!

பா.ம.க உள்ளிட்ட கட்சிகளில் மாநில அளவில் பொறுப்பு வகித்தவரும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனறுமான திரு. பசுபதி பாண்டியன் அவர்கள் நேற்று சில சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திரு.பசுபதி பாண்டியன் அவர்கள் தலித் சமூகத்திற்காக மாத்திரமன்றி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒற்றுமைக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்தவர். ஏற்கனவே பலமுறை சமூக விரோதிகளின் கொலை முயற்சிக்கு இலக்காகியிருந்தும், அவரது மனைவி அந்த கொலை முயற்சியில் படுகொலை செய்யப்பட்டிருந்தும் காவல் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

Dua For Gaza