அஹ்மதாபாத்:கோத்ரா ரெயில் தீவைப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவர முதல்வர் மோடி தீர்மானித்திருக்கலாம் என குஜராத் முன்னாள் அமைச்சர் கோர்டன் ஸதாஃபியா நானாவதி கமிஷன் முன்னால் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
2002 பிப்ரவரி 28-ஆம் தேதி டி.ஜி.பி அலுவலகத்திற்கு செல்ல முன்னாள் அமைச்சர் ஐ.கே.ஜடேஜாவுக்கு நான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என ஸதாஃபியா கூறினார். நகரத்தில் கலவர சூழல் ஏற்பட்டது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என ஸதாஃபியா கூறுவது பொய் என மோடியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிசஞ்சீவ் பட் கூறியிருந்தார்.

