Monday, November 21, 2011

கல்லறையை திறந்த வழக்கில் டீஸ்டா ஸெடல்வாட் முக்கிய குற்றவாளி – மோடி அரசு

imagesCAH2LXWF
புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் கல்லறையை திறந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.

வழக்கில் விசாரணையை சந்தித்துவரும் டீஸ்டாவும், அவரது உதவியாளரான ரஈஸ் கான் பத்தான் ஆகியோர் பந்தவாடாவுக்கு அருகே அனுமதியில்லாமல் கல்லறையை திறந்த சம்பவம் திட்டமிட்டு செயல்படுத்தியது என மோடி அரசு கூறியுள்ளது.

மும்பை தாக்குதல்:3-ஆம் ஆண்டு நிறைவு – ஹெட்லி இன்னமும் விசாரிக்கப்படவில்லை

mumbai-attack4_630
மும்பை:மும்பை தாக்குதல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இச்சம்பவத்திற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லியை விசாரணை செய்ய மும்பை போலீசாரால் இயலவில்லை.

ஹெட்லியையும், தஹாவூர் ராணாவையும் விசாரணை செய்ய அமெரிக்காவின் பதிலுக்காக மும்பை போலீஸ் காத்திருக்கிறது. இவர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தூதரக ரீதியான கடிதத்திற்கு இதுவரை அமெரிக்க நீதிமன்றம் பதிலளிக்கவில்லை.

கட்கரி-மோடி மோதல்: பா.ஜ.கவில் மீண்டும் கோஷ்டி பூசல் களைகட்டுகிறது

imagesCANQS465
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கவே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என முன்னரே கோரிக்கை விடுத்துள்ளார் பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி.

பா.ஜ.க தலைவர்களிடையே நடைபெற்றுவரும் கோஷ்டி பூசல் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னர் பிரதமர் பதவியை குறிவைத்து மோடி நடத்திய நாடகங்களுக்கு எதிராக அத்வானி கும்பல் களமிறங்கியிருந்தது. அத்வானியின் மங்கிப்போன ரத யாத்திரை நேற்று டெல்லியில் களை இழந்து முடிவுற்ற வேளையில் கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ban

ஸ்ரீநகர்:ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு தடைவிதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்த வருகிறது. இணையதளத்தின் உள்ளடக்கம் கஷ்மீரில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் எனவும், ஆதலால் ஃபேஸ்புக்கை தடைச் செய்யவேண்டும் என போலீஸ் மாநில அரசிற்கு பரிந்துரைச் செய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சைபர் குற்றங்கள் போலீசாருக்கு பெரும் சவாலாக திகழ்வதாக டி.ஜி.பி குல்தீப் கோதா அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார். இத்தகைய குற்றங்களை கண்டறிய ஸ்ரீநகர், ஜம்மு க்ரைம் தலைமையகம் ஆகியவற்றில் மூன்று சைபர் போலீஸ் ஸ்டேசன்களை நிறுவப்போவதாக அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோடை காலத்தில்தான் கஷ்மீர் அமைதியாக இருந்துள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

images
ராமல்லா:இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய ஃபலஸ்தீன் இளைஞரின் வீடு மீது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் சட்ட விரோதமாக வசிக்கும் இஸ்ரேலிய யூதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெற்கு மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் உள்ள ஃபலஸ்தீன் இளைஞர் ஹானி ஜாபிரின் வீடு மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்வோம் – என்.டி.சி

saif
திரிபோலி:நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகனும், கத்தாஃபி ஆட்சியில் முக்கிய நபருமான ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்வோம் என தற்காலிக அரசான தேசிய இடைநிலை குழு(என்.டி.சி) அறிவித்துள்ளது.

சவூதியில் வாகன விபத்து:14 பேர் மரணம்

sau_hail
ரியாத்/ஹைல்:மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் இன்னொரு வாகனத்துடன் மோதியதில் 12 பல்கலைக்கழக மாணவிகள் உள்பட 14 பேர் மரணித்துள்ளனர். நேற்று காலை ஹைலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மரீஃபகில் இவ்விபத்து நடந்துள்ளது.

கலீஃபத்து ஸுஹ்லா கிராமத்தில் இருந்து ஹைல் பல்கலைக்கழக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஜீப் ஒன்றுடன் மோதியது. விபத்தில் பலியான மாணவர்கள் 18 வயதிற்கும் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.

சமூக நீதி மாநாட்டை வெற்றிபெறச் செய்ய கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை

புதுடெல்லி:இம்மாதம் 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு அனைத்து மாணவர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென இந்தியாவின் பிரபலமாகி வரும் துடிப்பு மிக்க மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான அறிக்கையை அமைப்பின் தேசிய தலைவர் அனீஸுஸ்ஸமான், பொதுச்செயலாளர் சி.எ.ரவூஃப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Sunday, November 20, 2011

முன்னாள் அமைச்சர் மத்திய தொலைத் தொடர்புத் துறை சுக்ராமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை

sram_841197e
புதுடெல்லி:தொலைத்தொடர்பு ஊழல் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுக்ராமிற்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு ரூ.30 கோடி ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில்தான், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

ஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்

imagesCA3LTKTU

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல் நடந்த ஸர்தார்புராவில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம் வீடுகளை அடையாளம் காண தெருவிளக்கு கம்பத்தில் ஹாலோஜன் விளக்கை மாட்டி உதவியவர்கள் குஜராத் மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆவர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரில் மூன்றுபேர் மின்சார வாரிய ஊழியர்களாவர். மதுர் பட்டேல், ஜயந்த் பட்டேல், கணேஷ் பிரஜாபதி ஆகியோர் ஆவர்.

Dua For Gaza