Thursday, June 2, 2011

பாவப்பட்ட கோடீஸ்வரன்!

பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.

எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி, தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார். ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.

மாற்று எரிபொருள் இருக்க பெட்ரோல் இறக்குமதி ஏன்?

"எத்தனால்" இது கரும்பு, மக்காசோளம், போன்றவற்றில் இருந்து தாயாரிக்கப்படுகிறது. இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம்.  இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது

அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸில்வான், அல் இஸாவிய்யா பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் ஜெரூசலவாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (31.05.2011) மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் காவல்துறைமீது கற்களை எறிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 760 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, ஏனையோர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தயாநிதி மாறனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் - முதல்வர் பேட்டி

சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதால் அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பேட்டி விபரம் -

கேள்வி : தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக புகார் கூறப்படுகிறதே?

பதில் : அரசு இதில் தானாக தலையிட முடியாது. புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தாக்க இஸ்ரேல் முன்னாயத்தம்?

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ஐரோப்பாவில் இருந்து காஸாவை நோக்கிப் பயணப்பட இருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்களை இடைநிறுத்துவதற்கு ராஜதந்திர நடவடிக்கைகளைக் கைக்கொள்ளும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபடப் போவதில்லை. மாறாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் கட்டளைகளுக்குக் கீழ்படிய மறுக்கும் யார் மீதும் பலப்பிரயோகம் செய்ய அது தயங்காது என இஸ்ரேலிய செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் உத்தரவுகளை ஏற்க மறுத்து காஸா கடற்கரையை அண்மிக்குமாக இருந்தால், அவற்றின்மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

Wednesday, June 1, 2011

2ஜி விவகாரம் - சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!

அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,
2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.


இந்த நடைமுறை,  ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை என்ன நடந்தது என்று விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட

மிலோசெவிக்! ராஜபக்சே! நரேந்திர மோடி!

எல்லா புகழும் இறைவனுக்கே. விடி வெள்ளி தெரிகிறது.

நர மாமிச ராஜபக்சேவே நாட்களை எண்ணிக்கொள்.  லட்சக்கணக்கான எம்மக்களின் வாழ்வில் நெருப்பிட்டவனே!

துவக்கிவிட்டோம் எம் பயணத்தை. எம் பயணம் பழி வாங்கும் நோக்கம் அல்ல பதுங்கி இருக்கும் உன் போன்ற செவிட்டு மிருகங்களின் காதுகள் துளைக்க,

ஒலி அலைகளாய் வியாபித்து நிற்கும் எம் இனத்தின் ஓலங்களின் சப்தங்களை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பார் அந்த அவலங்களே உன்னைக் கொள்ளுமடா.

பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் ஆக்கிரமிப்புப் படை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அல் ஃபரீஸிய்யா, அல் மெய்த்தா ஆகிய பகுதிகளில் அராபிய பதூனி மக்களுக்குச் சொந்தமான 14 கட்டடங்களை புல்டோஸர் மூலம் இடித்துத் தகர்த்துள்ளது. இப்பகுதியில் பதூனிய மக்கள் வாழும் சுமார் 5 குடியிருப்புகள் காணப்படுகின்றன.மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் இம்மக்களின் வாழிடங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்களைவிட்டு வெகுதொலைவில் அமைந்திருந்த போதிலும், அல் மெய்த்தாவில் 8 வீடுகளும் அல் ஃபஸ்ரிய்யாவில் 6 வீடுகளும் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் இடித்து நிர்மூலமாக்கப்பட்டன.

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் வழிந்த பெட்ரோலை பிடித்த 5 பேர் பலி! 20 பேர் படுகாயம்!!

கவுகாத்தியில் இருந்து ஜோர்காட் என்ற இடத்துக்கு ஒரு டேங்கர் லாரி, நேற்று முன்தினம் ஞாயிறு அன்று இரவில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. கோலகட் மாவட்டத்தில் உள்ள பாடுலிபரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலை வளைவில் தடுமாறி கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தின் காரணமாக சாலையில் பெட்ரோல் ஆறாக ஓடியது. இதக் கண்ணுற்ற அக்கம்பக்கத்தில் உள்ள கிராம மக்கள்திரண்டு வந்து, சாலையில் வழிந்தோடிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தாழ்வாக சென்று கொண்டிருந்த ஒரு மின்சார ஒயர், லாரியின் டேங்கருக்குள் விழுந்துவிடவே, திடீர் என டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்!

ஒவ்வொரு 15 நாட்கள் கழிந்ததும் தொடாச்சியாக முன்று கிரகணங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஒரு மாத காலத்தில் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.

முதலில் இன்று ஜூன் 1ல் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.  இது,  இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.55 மணி முதல் நாளை வியாழன் அதிகாலை 4.37 மணிவரை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இது ஏற்படுவதால் இந்தியாவில் இதை காணும் வாய்ப்பு இல்லை. சைபீரியா, வடக்கு சீனா, அலாஸ்கா, நோவா ஸ்காட்டியா ஆகிய நாடுகளில் தெரியும்.

Dua For Gaza