Wednesday, January 30, 2013

ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து தூத்துக்குடியில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்



தூத்துக்குடி : ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க வும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து 27.01.2013 அன்று மாலை சரியாக 5.15 மணிக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு SDPI கட்சி சார்பாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் B.J.P மற்றும் R.S.S இயக்கங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடைசெய்ய வேண்டும் , பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் இதர நிரபராதிகளையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் மைதீன் தலைமை தாங்கினார் . மாவட்ட பொது செயலாளர் பாசில் சமீர் வரவேற்புரை நிகழ்த்தினார் . சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza