Tuesday, January 15, 2013

"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்"

பாலியல் குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வரும் ஒருவரை அக்கொடிய குற்றங்களுக்காகத் தூக்கிலிடும்படி அவரது மனைவியே கோரிக்கை விடுத்துள்ளார். பாலியல் குற்றம் ஒன்றுக்காக சிறைப்பட்டிருந்த அந்த நபர், சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்து  ஒரு சிறுமியை கடத்தி வன்புணர்ந்துகொன்றதாக மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.


கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று மஹாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் ஷிர்டி என்னும் நகரில் 9 வயதேயான சிறுமியை கடத்திச் சென்று வ்ன்புணர்ந்து கொலை செய்ததாக, சுனில் சுரேஷ் என்னும் பப்பு சால்வே(32) இரு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பப்பு சால்வேயின் மனைவியான சரிகா சால்வே(28) "இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்த இவரை உடனடியாகத் தூக்கிலிடுங்கள்" என்று கோரியுள்ளார்
இந்த வழக்குத் தொடர்பாக. 17ம் தேதி வரை காவல்துறை காவலில் பப்பு சால்வே வைக்கப்பட்டுள்ளார்.


"என் கணவர் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன்; தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் வந்து இந்த ஆளை அம்பலப்படுத்துவேன்" என்று ஆவேசமாகக் கூறினார் இரு பெண்குழந்தைகளின் தாயான சரிகா.

"என்னை இவர் அடித்து உதைப்பது வழக்கம்.  அடி உதைகளைத் தாங்காமல் ஒரு முறை தற்கொலைக்கு முயன்று நச்சுமருந்து குடித்தேன். ஆனால் மருத்துவமனையில் சேர்த்து  என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்ற சரிகா "அப்போது கூட இந்த ஆள் மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்க்கவில்லை" என்றார்

முன்னதாக, இதே போன்று சிறுமிகளை வன்புணர்ந்து கொன்ற   வழக்குகளில் சிக்கி இருமுறை சிறைத் தண்டனை பெற்றவர்தாம் இந்த பப்பு சால்வே என்பது குறிப்பிடத் தக்கது.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza