Tuesday, January 17, 2012

பெரும்பான்மையினர் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது: வினோத் ராய்(CAG)

vinod rai
புதுடெல்லி:2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இறுதி இழப்புத் தொகை ரூபாய் 1.76 கோடி என்று நிர்ணயித்த ஆடிட்டர் ஜெனரல் (Comptrollerand Auditor General – CAG) வினோத் ராய் ஜனநாயகம் என்பது குறுக்குச் சாலைகளில் உள்ளது என்றும் “மௌனமாக இருந்த பெரும்பான்மையினர் பேசுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

“Älumunus of the Decade” என்ற விருது பெறுவதற்காக தனது பழைய கல்லூரியின் மாணவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகம் என்பது குறுக்கு சாலைகளில் அமைந்துள்ளது, அதனால் அமைதிகாக்கும் பெரும்பான்மையினர் (Majority) ஒவ்வொருவரும் கூடி தங்கள் பங்களிப்பை கொடுத்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் ஏனெனில் பெரும்பான்மையினருக்கு பதிலாக சிறுபான்மையினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza