Monday, June 20, 2011

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: கொள்ளைகார கருணாநிதி குடும்பத்து ஆண்கள் ஒரு பெண்ணை சிறையில் தள்ளிவிட்டு வெளியே உலாவருகிறார்கள். கனிமொழியை இந்த விவகாரத்தில் சிக்கவைத்த கருணாநிதியோ அல்லது ஸ்டாலின் போன்றோரோ உள்ளே இருக்க வேண்டியவர்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza