Wednesday, June 29, 2011

திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்!

பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

இதற்காக மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரமின் மாவட்ட அமைப்பாளர் சகோ.அப்துல் லதீப் ,மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் குழு பல சிகிச்சைகளுக்கு அவசர ரத்த தான உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza