Wednesday, June 22, 2011

தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசு!

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழக கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்

ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

சிந்திக்கவும்: சொந்த நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத ஒரு அரசு எல்லாம் ஒரு அரசா! வல்லரசாம் இல்ல வல்லரசு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza