Monday, May 30, 2011

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

 உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார். முதலில் துபாய் சென்று வீட்டை பார்வையிட்டார். 29&வது மாடியில் 940 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வீடு அவருக்கு பிடித்திருந்தது.

மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து அந்த வீட்டை வாங்கினார். கொச்சின், திருவனந்தபுரம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள இவரது வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டவை.

அதேபோல் புர்ஜ் கலிஃபா வீடும் கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு நாட்களை துபாயில் உல்லாசமாக கழிப்பதுதான் மோகன்லாலின் வழக்கம்.

ஏற்கனவே அவருக்கு அங்கு பங்களா உள்ளது. இதே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு,

அவரது கணவர் முதலாண்டு திருமண நாள் பரிசாக வாங்கித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் பலரும் இந்த குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளனர்.

சிந்திக்கவும்: ஒரு மனிதன் வாழ வசதியாக ஒரு வீடு போதாதா? எத்தனை வீடுகள் வாங்குவார்கள் இவர்கள். ஓவ்வொரு மனிதனும் "தான்" வசதியாக வாழ ஒரு வீடு, ஒரு கார், போதிய அளவு பொருளாதாரம் இவைகள் போதாதா?

மற்ற பணத்தி இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தால் என்ன? துபையில் அதுவும் மூன்றரை கோடி ரூபாய்க்கு வீடு, அதிலும் இவர் நிரந்தரமாக வசித்தாலும் பரவாயில்லை இவர் விடுமுறையை கழிக்கத்தான் அதுவும்.

இப்படி பட்ட சமூக சிந்தனை அற்ற சினிமா கூத்தாடிகளை பார்த்துதான் இந்த மக்கள் மதி மயங்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு இந்திய குடிமகனின் பணமும் துபையில். "நமக்கு கீழே உள்ளவர்கள் கோடி நினைத்து பாரு" புரியுமா இந்த கூத்தாடிகளுக்கு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza