Monday, April 11, 2011

ஆ. ராசாவின் சகோதரர் கைது!

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக 2G ஊழல் வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாளைக் காவல்துறை கைது செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிகாடு மற்றும் இறையூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு வாக்காளர்களுக்குப்  பணம் வழங்கிய போது ராசாவின் சகோதரர் காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டி கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட கலியபெருமாளைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்  பட்ட ராசாவின் சகோதரர் கலியபெருமாளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza