Tuesday, March 15, 2011

கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி

ஜம்மு,மார்ச்.15:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 102 நபர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிதியுதவியாக 5.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதனை கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 894 பேர் காயமடைந்தனர். 18 பேருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza