Sunday, February 27, 2011

தீவிரவாதி சுனில் ஜோஷி கொலையில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது

தீவிரவாதி சுனில் ஜோஷி கொலை வழக்கில் பெண் சாமியார் பிரக்யாசிங்கை மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் குண்டு வெடிப்பு, சம்ஜௌத தொடர்வண்டி குண்டு வெடிப்பு என்று அண்மைக் காலமாக இந்தியாவில் சம்பவித்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவன் என்று குற்றம் சுமத்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி சுனில் ஜோஷி 2007, டிசம்பர் 29-ம் தேதி  மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.  உண்மைகளை மறைக்கும் நோக்கில் இந்துத்துவ துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இவனைச் சுட்டுக்கொன்று விட்டதாகச் சொல்லப்பட்டது.

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பிரக்யா சிங், தற்போது மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2007, டிசம்பர் 29-ம் தேதி சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza