Sunday, December 19, 2010

வாட்டர்போடிங் குற்றவாளிகளை பாதுகாக்கும் சி.ஐ.ஏ

வாஷிங்டன்,டிச.18:ரகசியச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை வாட்டர்போடிங் சித்திரவதைச் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜிம் மிச்சல், ப்ரூஸ் ஜெஸன் ஆகியோரின் வழக்கை நடத்துவதற்காக கட்டணத்தில் 50 லட்சம் டாலர் அளிக்க சி.ஐ.ஏ சம்மதித்துள்ளது.

வாட்டர்போடிங் சித்திரவதைக் கலையை கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவர்கள் என கண்டறியப்பட்ட இவ்விருவரும் தற்பொழுது வழக்கு விசாரணையை சந்தித்து வருகின்றனர்.

கைகால்களை கட்டிய பிறகு துணியால் முகத்தை மூடி பின்னர் மூச்சுத்திணறும் விதமாக முகத்தில் தண்ணீரை வேகமாக பாய்ச்சுவதுதான் வாட்டர்போடிங் என்ற சித்திரவதை.

ஏராளமான சிறைக் கைதிகளை வாட்டர்போடிங் என்ற சித்திரவதைக்கு ஆளாக்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரையும் தண்டனையிலிருந்து விடுவிக்கத்தான் சி.ஐ.ஏ பணத்தை அளித்துள்ளது என முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரியொருவர் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza