Monday, December 13, 2010

கடந்த இருபது வருடங்களில் கஷ்மீரில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்

ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

2002-100 பேர், 2010-4, 2009-6, 2007-9, 2006-17, 2005-40, 2004-62, 2003-52, 2001-76, 2000-35 என புள்ளிவிபரம் கூறுகிறது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்.
செய்தி:பாலைவனதூது 
AQ

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza