Monday, December 27, 2010

எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல் - தேவகவுடா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் நில ஆக்கிரமிப்பு, ஊழல் குறித்த விபரங்களைப் பட்டியலிட்டு மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா புத்தகம் வெளியிட்டுள்ளார்.அதில் எடியூரப்பா அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புத்தகத்தை பெங்களூரில் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கர்நாடக ஊழலை விளக்கும் இந்த புத்தகத்தில் பெங்களூரு,மைசூர் உள்கட்டமைப்பு திட்ட ஊழல்,சுரங்கத் தொழில் முறைகேடு, நில ஆக்கிரமிப்பு, நில ஒதுக்கீடு ஆகிய ஊழல்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இந்த புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

கர்நாடகாவை ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இதில் உள்ளன. மத்திய புலனாய்வு துறை, அமலாக்க துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

நாட்டிலேயே மெகா ஊழல்வாதியாக எடியூரப்பா திகழ்கிறார். நான் கவர்னர் பரத்வாஜை சந்தித்து எடியூரப்பாமீதான புதிய ஊழல் புகார்களை கொடுக்க இருக்கிறேன். பாரதீய ஜனதாவின் நில மோசடி விவகாரத்தை மக்கள் மத்தியில் விளக்கி கூறப்போவதாகவும் தெரிவித்தார்.

தேவகவுடாவின் புத்தகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா தேசிய அரசியலில் முன்னேறுவதற்கான வழிகளை பார்ப்பது நல்லது" என்று கிண்டலடித்தார்.
செய்தி  :பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza