Sunday, October 24, 2010

வெட்ட வெளிச்சமானது ஆர்.எஸ்.எஸ் ன் உண்மை முகம்: காங்கிரஸ்

புதுடெல்லி,அக்.24:அஜ்மீர் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிகையில் ஹிந்துத்துவா இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரை குற்றவாளியாக்கியதன் மூலம் அவ்வமைப்பின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

தேசத்தின் பன்முகத் தன்மைக்கும், மதசார்பற்ற கொள்கைகளுக்கு ஊறுவிளைவிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு அவசரமாக தேவைப்படும் மத நல்லிணக்கத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் தகர்த்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில், இந்திரேஷ்குமாரை அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உட்படுத்தவில்லை என பா.ஜ.க கூறுகிறது.

இந்திரேஷ்குமாருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் ஒன்றுமில்லை எனவும், அரசு ஆர்.எஸ்.எஸ் போன்ற தேசியவாத(?) இயக்கங்களை குறிவைக்கிறது எனவும் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza